ADDED : ஏப் 25, 2025 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகள் சந்திரமுகி,19; அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார்.
கடந்த, 22ம் தேதி காலை 7:30 மணியளவில் வழக்கம் போல கல்லுாரிக்கு புறப்பட்டு சென்றவர், மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது தாய் அலமேலு கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.