sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தியாகதுருகம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீசார் மெத்தனம்

/

தியாகதுருகம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீசார் மெத்தனம்

தியாகதுருகம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீசார் மெத்தனம்

தியாகதுருகம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தாமல் போலீசார் மெத்தனம்


ADDED : அக் 29, 2025 09:12 AM

Google News

ADDED : அக் 29, 2025 09:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தியாகதுருகம்: தியாகதுருகம் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதை போலீசார் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.

தியாகதுருகம் நகரின் வழியே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அகலம் குறைவான இச்சாலையின் இருபுறமும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கனரக வாகனங்கள் எதிரெதிரே கடந்து செல்வதற்கு கூட போதிய இடம் இன்றி மிகுந்த சிரமப்பட்டு செல்கின்றன. பாதசாரிகள் நடந்து செல்வதற்கு சாலையோரம் இடமின்றி தவிக்கின்றனர்.

நடந்து செல்ல போதிய இடம் இல்லாததால் மாணவர்கள் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். ஆட்டோக்கள் விதிகளை மீறி வாடிக்கையாளர்களுக்காக ஆங்காங்கே நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

அதேபோல் சாலையோர கடைகளில் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களும், தங்களின் இரு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி செல்வதால் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது. கடைகளுக்கு கொண்டுவரும் சரக்குகள் நடுரோட்டில் லாரியை நிறுத்தி இறக்குவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன.

அரசியல் கட்சியினரின் ஊர்வலம் அல்லது தலைவர்கள் வருகையின்போது மட்டும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்துகின்றனர். மற்ற நேரங்களில் தியாகதுருகம் நகரின் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகளை அவதி அடைய செய்கிறது.

இதனால் பெரும்பாலான பஸ்கள் நகருக்குள் வராமலேயே புறவழி சாலையில் செல்வதால் பயணிகள் வெளியூர் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

வார சந்தை நாட்களில் கூட போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்படுவதில்லை.

திருக்கோவிலுார் சாலை சந்திப்பு, மார்க்கெட் பஸ் நிறுத்தம், புக்குளம் சாலை பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us