sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை

/

மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை

மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை

மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலை


ADDED : ஜூலை 08, 2025 12:31 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ராஜா நகரை சேர்ந்தவர் நாகூர்மீரான் மனைவி ரஹமத், 55; இவர் கடந்த 4ம் தேதி செக்கு மேட்டு தெரு வழியாக வங்கிக்கு நடந்து சென்றார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத பெண், தனது குழந்தைக்கு உடல் சரியில்லை, மருத்துவ செலவுக்காக தன்னுடைய தங்க காசை, வங்கியில் அடகு வைக்க முடியவில்லை.

அவசரமாக பணம் தேவைப்படுவதால் குறைந்த விலைக்கு 10 தங்க காசு தருவதாக கூறி, ரூ.1 லட்சம் பணம் கேட்டார்.இதனை நம்பிய ரஹமத் ரூ.70 ஆயிரத்துக்கு பேரம் பேசி முடித்தார். பின்பு, ரஹமத் அருகில் உள்ள தனியார் நகை அடகு கடைக்கு சென்று தனது 2 சவரன் தங்க செயினை அடகு வைத்து, ரூ.70 ஆயிரம் பணம் பெற்றார்.

அதனை அடையாளம் தெரியாத பெண்ணிடம் கொடுத்து, 10 தங்க காசுகளை வாங்கி வீட்டிற்கு சென்று பார்த்த போது போலி தங்க காசு என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ரஹமத் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, நுாதன முறையில் ஏமாற்றிய பெண்ணை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us