நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக எடுத்தவாய்நத்தம், அரியலுார் மற்றும் மூங்கில்பாடி துணை மின்நிலையங்களில் இன்று 19ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
நிர்வாக பணிகள் காரணமாக மூன்று துணை மின்நிலையங்களிலும் மின்நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக, மின்வாரிய செயற்பொறியாளர்கள் கணேசன், ரகுராமன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

