ADDED : ஜன 26, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த ரேஷன் கார்டு குறித்த குறைதீர் சிறப்பு முகாமில் 36 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, குடிமைப் பொருள் தனி தாசில்தார் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் முன்னிலை வகித்தனர்.
இவ்விரு முகாமிலும், முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல, திருத்தம், பெயர் நீக்குதல், முகவரி திருத்தம், மொபைல் எண் மாற்றம், பிறந்த தேதி திருத்தம் என என தலா 36 மனுக்கள் பெறப்பட்டு அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது.

