/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்
/
ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : ஜூலை 14, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகன் முன்னிலை வகித்தனர். முகாமில், பொதுமக்களிடமிருந்து ரேஷன் கார்டில் புதிதாக பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், மொபைல் எண் மற்றும் குடும்ப தலைவர் பெயர் மாற்றம், பிறந்த தேதி திருத்தம், ரேஷன் கார்டு நகல் தொடர்பாக 35 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.