
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: செம்பராம்பட்டு கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள், 60; இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்து சேதமானது. இதனை அறிந்த உதயசூரியன் எம்.எல்.ஏ., செம்பராம்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பழனியம்மாள் குடும்பத்தாருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கதிரவன், நகரச் செயலாளர் துறைதகப்பிள்ளை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

