sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தேவபாண்டலத்தில் சாலை மறியல்

/

தேவபாண்டலத்தில் சாலை மறியல்

தேவபாண்டலத்தில் சாலை மறியல்

தேவபாண்டலத்தில் சாலை மறியல்


ADDED : ஆக 18, 2025 11:31 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே நடந்த சாலை மறியல் போராட்டத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் காலனி மக்கள் நேற்று முன்தினம் ஏரிக்கரையில் உள்ள முனியப்பர் கோவிலில் முப்பூசை வைத்து வழிபாடு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சதிஷ்குமார், 30; கோவில் தனக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடி, பூஜை செய்ய கட்டணம் வசூல் செய்தார். இதனை தட்டிக் கேட்ட பொதுமக்களை சதிஷ்குமார் உருட்டு கட்டையால் தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து சங்கராபுரம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. நேற்று வரை சதிஷ்குமார் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணிக்கு சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் தேவபாண்டலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பொதுமக்களை தாக்கிய சதிஷ்குமாரை உடனடியாக கைது செய்வதாக உறுதி அளித்ததின்பேரில், காலை 11:00 மணிக்கு மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us