ADDED : செப் 29, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த தும்பை மணி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது.
உடன், அங்கு சென்று சோதனை செய்து, டிராக்டரில் மணல் கடத்திய கூடலுார் கிராமத்தைச் சேர்ந்த தீர்த்தன் மகன் செல்வமணி, 32; என்ப வரை கைது செய்து டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர்.