/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
/
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
ADDED : செப் 28, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த மாரனோடை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் அழகு செந்தில்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
போலீசை பார்த்ததும் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மாட்டு வண்டிகளை விட்டுவிட்டு தப்பியோடினார். உடன், 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மாட்டு வண்டிகளை திருநாவலுார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.