/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
/
மணல் திருட்டு 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ADDED : மார் 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 4:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டி.ஒரத்துார் கிரமம் அருகே கெடிலம் ஆற்றில் சிலர் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதைப் பார்த்து போலீசார் அங்கு சென்றனர்.
போலீசை பார்த்ததும் மணல் அள்ளிய நபர்கள் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பியோடினர்.
போலீசார் 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

