ADDED : செப் 20, 2024 08:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : அக்கராயபாளையம் பகுதியில் மது போதையில் தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல், 57; இவரது மகன் ஆசைமணி, 31; மது போதைக்கு அடிமையான ஆசைமணி அடிக்கடி குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் மது போதையில், அவரது தந்தை ஆனந்தவேலுவை கடுமையாக தாக்கினார். புகாரின்பேரில், கச்சிராயபாளைம் போலீசார் வழக்குப் பதிந்து ஆசைமணியை கைது செய்தனர்.