/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாமியாரை தாக்கிய மருமகன் கைது
/
மாமியாரை தாக்கிய மருமகன் கைது
ADDED : டிச 08, 2025 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாமியாரை தாக்கிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்த தேவேந்திரன் மனைவி விருத்தாம்பு, 49; இவர் கடந்த 1ம் தேதி காலை பேர பிள்ளைகளுடன் வீட்டிலிருந்தார். அப்போது அங்கு வந்த மருமகன் காட்டனந்தல் காட்டுகொட்டாய் சேர்ந்த சேகர் மகன் சக்திபிரியன், 22; குடும்ப பிரசனை காரணமாக மாமியார் விருத்தாம்புவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக விருத்தாம்பு அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சக்திபிரியன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

