sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

/

செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


ADDED : அக் 05, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 05, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு புரட்டாசி சதுர்தசி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு வளர்பிறை புரட்டாசி சதுர்த்தசி சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணி முதல் திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், மீனாட்சி சொக்கநாதர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், முழவு, கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடந்தன. திருநாவுக்கரசு திருமட சிவனடியார்கள் வழிபாடு நடத்தினர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் நடராஜருக்கு புரட்டாசி சதுர்த்தசி சிறப்பு வழிபாடு நடந்தது.






      Dinamalar
      Follow us