/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
/
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய மக்கள் பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
ADDED : அக் 05, 2025 11:14 PM

கள்ளக்குறிச்சி: ஆயுத பூஜை விடுமுறை முடிந்து வெளியூர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது.
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர், சென்னை, கோயம்புத்துார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இதேபோல், ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் கூலிவேலை செய்கின்றனர். ஆயுத பூஜை விடுமுறையில் கடந்த வாரம், சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
தொடர்ந்து, 5 நாள் விடுமுறை முடிந்து, தாங்கள் படிக்கும் இடங்களுக்கு மற்றும் பணியாற்றும் ஊர்களுக்கு செல்ல, நேற்று காலை 10:00 மணி முதல், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் ஏராளமானோர் குவிந்தனர். பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறியதால், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
மாணவ, மாணவியரை வழியனுப்ப, அவர்களது பெற்றோரும் உடன் வந்ததால், கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.