/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
/
செம்பொற்சோதிநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED : ஏப் 23, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி::
கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருநாவுக்கரசர் குருபூஜையில் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம், திருநீற்றம்மை உடனருள் செம்பொற்சோதிநாதர் கோவிலில் சதய நட்சத்திர தினமான நேற்று திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது.
தொடர்ந்து சிவபெருமானுக்கு உகந்த பன்னிரு சைவத்திருமுறைகளில், 8 ம் திருமுறையாக உள்ள மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும், கோவில் ஓதுவார்கள் நேற்று காலை முதல் மதியம் வரை ஓதினர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருநாவுக்கரசு நாயனார் திருக்கூட்டத்தினர் உழவாரப்பணிகளை மேற்கொண்டனர்.