ADDED : ஏப் 26, 2025 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில், 2 வயதுடைய ஆண் மான் நேற்று அதிகாலையில் புறவழிச்சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் புள்ளி மான் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக இந்திலி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, தகரை காப்புக்காட்டில் மானின் உடல் புதைக்கப்பட்டது.

