ADDED : செப் 25, 2025 04:19 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கும், 11 கட்டங்களாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வார்டு எண் 24, 25க்கு ஜெய விஜய மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
நகராட்சி ஆணையர் திவ்யா தலைமை தாங்கினார்.
தாசில்தார் ராமகிருஷ்ணன், பொறியாளர் ஜெயபிரகாஷ், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள் சக்திவேல், பிரகாஷ், ஜெயந்திமுருகன் முன்னிலை வகித்தனர். நகராட்சி சேர்மன் முருகன் முகாமினை துவக்கி வைத்து மனுக்களை பெற்றார்.
முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய மின்னணு ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் திருத்தம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 13 அரசுத்துறையைச் சேர்ந்த, 43 சேவைகள் வழங்கப்பட்டது. நகராட்சி ஊழியர்கள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.