sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ'வில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள்

/

கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ'வில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள்

கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ'வில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள்

கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ'வில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள்


ADDED : ஜன 03, 2025 06:16 AM

Google News

ADDED : ஜன 03, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ' மைதானத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான 11 வயதிற்குட்பட்டோருக்கான இறகுப்

பந்துப் போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி பசுங்காயமங்கலம் சாலையில் உள்ள 'ஐ ஷெட்டல் ஸ்டுடியோ' மைதானத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிகள் நடக்கிறது. கள்ளக்குறிச்சியில் முதல் முறையாக மாநில அளவிலான 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளுக்கென நடக்கும் இப்போட்டிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

5-ம் தேதி வரை நடக்கும் இறகுப்பந்து போட்டி-களை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது :

விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதினால் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கை வளரும். விளையாட்டு வீரர்களுக்கு தோல்வி நிரந்தரம் அல்ல. தோல்வியிலிருந்து வெற்றிக்கான பாடத்தை கற்றுக் கொண்டால் வாழ்வு சிறக்கும். என தெரிவித்தார்.

இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ்குமார், கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப் பந்து கழக தலைவர் ரவி, செயலாளர் பிரதீப்சந்த், பொருளாளர் பரத் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us