/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரும்பு கம்பி திருட்டு போலீஸ் விசாரணை
/
இரும்பு கம்பி திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : பிப் 04, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே இரும்பு கம்பிகள் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 45; சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், சங்கராபுரம் அடுத்த பாச்சேரி கிராமத்தில் தரைப்பாலம் கட்டுவதற்கு கான்ட்ராக்ட் எடுத்து பணி நடைபெறும் இடத்தில் 820 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் வைத்திருந்தார்.
இந்த கம்பிகள் திருடு போனதாக அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.