sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரிஷிவந்தியத்தில் தெரு நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

/

ரிஷிவந்தியத்தில் தெரு நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

ரிஷிவந்தியத்தில் தெரு நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

ரிஷிவந்தியத்தில் தெரு நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்


ADDED : ஏப் 26, 2025 05:32 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

கடந்த,10 ஆண்டுகளுக்கு முன்பு, தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து கருத்தடை செய்தனர். மேலும், வெறிபிடிக்காமல் இருக்க தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இதனால் தெருநாய்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதில்லை. இதனால் அதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்களை குரைத்தவாறு துரத்தி செல்கிறது. நாய் கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் வேகமாக செல்பவர்கள், திடீரென கீழே விழுந்து காயமடைகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், உஷ்ணத்தாலும், உணவு கிடைக்காமல் பசியினாலும் பல நாய்களுக்கு வெறி பிடித்துள்ளது.

அவ்வாறு வெறி பிடித்த நாய்கள் தெருக்களில் செல்லும் பொதுமக்களையும், கால்நடைகளையும் கடிக்கிறது. இந்த நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'என்றனர்.






      Dinamalar
      Follow us