sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

/

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு

மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : ஜூன் 09, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூன் 09, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மீன் வளர்ப்பு உள்ளீடு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு மீன் வளர்ப்பு உள்ளீட்டு மானியம் வழங்குவதற்கு 10 எக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு எக்டரில் மீன் வளர்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளீடாக 10 ஆயிரம் மீன் விரலிகள் (மீன் குஞ்சுகள்) கொள்முதல் செய்திட 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினர்களாக உள்ள மீன் வளர்ப்பு விவசாயிகள் மானியத்திற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி முன்னுரிமை அளித்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மீன் குஞ்சு இருப்பு செய்த உடன் மானியத் தொகை விடுவிக்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். மேலும் விபரங்களை 04146-259329 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us