sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

 கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு

/

 கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு

 கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு

 கள்ளக்குறிச்சியில் ரூ.14,051.55 கோடி கடன் வழங்க இலக்கு


ADDED : நவ 28, 2025 05:28 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் ஆண்டில் 14,051.55 கோடி வங்கிகள் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கடந்த அரையாண்டில் மாவட்ட அளவில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு 6,918.34 கோடி ரூபாயும், சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு 599.44 கோடி ரூபாயும் மற்ற கடன்கள் 331.57 கோடி ரூபாயும், மகளிர் சுய உதவிகளுக்கு 407.46 கோடி ரூபாய் என மொத்தம் 7,849.35 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், வரும் ஆண்டிற்கு மாவட்டத்தில் 14,051.55 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் கடந்தாண்டை விட மிக கூடுதலாக கடன் வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள், விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களுக்கும் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us