ADDED : ஜன 14, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் நாளை 15 ம் தேதி மற்றும் 26 ம் தேதி டாஸ்மாக் மற்றும் மதுபான கூடங்கள் இயங்காது.
கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
நாளை 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டும், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும்.
அன்றைய தினத்தில் மதுக்கூடங்களில் மது விற்பனை செய்தால், டாஸ்மாக் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுக்கூடத்தின் உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கையுடன், மதுக்கூட உரிமையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.