ADDED : பிப் 16, 2025 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : பைக்கில் சென்ற டெய்லர், வாகனம் மோதி இறந்தார்.
மணலுார்பேட்டை அடுத்த பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 42; டெய்லர்.
இவர், நேற்று முன்தினம் திருக்கோவிலுார் - மணலுார்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
பிள்ளையார் பாளையம், தனபால் என்பவரின் நிலத்தின் அருகில் சென்ற போது, எதிரில் வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 38; ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்த்திபன் இறந்தார்.
புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

