/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சித்தியை தாக்கிய ஆசிரியர் கைது
/
சித்தியை தாக்கிய ஆசிரியர் கைது
ADDED : பிப் 21, 2024 08:10 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே குடும்பத் தகராறில் சித்தியை தாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா கொரட்டங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம் மகன் குமரன், 36; இவர் உளுந்துார்பேட்டை தாலுகா வேலுார் அரசு மாதிரி பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சித்தி அமிர்தலிங்கம் மனைவி ஜோதி ,65; இவர் கொரட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார்.
இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை காரண மாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சித்தி ஜோதியை, குமரன் ஆபாசமாக திட்டி தாக்கினார். ஜோதி கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து ஆசிரியர் குமரனை கைது செய்தனர்.

