sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

/

சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா

சின்னசேலத்தில் ஆசிரியர் தின விழா


ADDED : செப் 08, 2025 03:17 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தமிழ்ச் சங்கம், நயினார்பாளையம் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.

தாகம்தீர்த்தாபுரம் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவர் தொல்காப்பியன், கால்நடை டாக்டர் ரத்தினவேலு, சின்னசேலம் தமிழ் சங்க செயலாளர் அம்பேத்கர், நயினார்பாளையம் லயன் சங்க தலைவர் முத்தையன் முன்னிலை வகித்தனர்.

சின்னசேலம் தமிழ்ச் சங்க ஆலோசகர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சின்னசேலம் தமிழ் சங்கத்தலைவர் கவிதைத்தம்பி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை ஆசிரியர் முருகன் திறந்து வைத்தார்.

உளுந்துார்பேட்டை சாரதா ஆஸ்ரம அருட்சகோதரி யதீஸ்வரி சச்சிதானந்த ப்ரியா அம்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் இதயம் கிருஷ்ணா தலைமையில் எழுத்தறிவித்தவன் இறைவன் எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடந்தது.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக பட்ட ஆய்வாளர் வாசுதேவன் ஆசிரியர்களை போற்றுவோம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

சங்க பொறுப்பாளர்கள் வெற்றிவேல், கண்ணன், அசோகன், ஆறுமுகம், கருணாநிதி, ராஜா, மதலேனாள் கபிரியேல் நடராஜன், மணிரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். அண்ணாமலை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us