ADDED : மார் 27, 2025 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கோவில் உண்டியலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த அருளம்பாடியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன், 33; அதே பகுதியில் உள்ள முருகன் கோவில் தர்மகத்தாவாக உள்ளார். கடந்த, 25 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றவர், நேற்று மீண்டும் திறந்த போது அங்கு இருந்த உண்டியல் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.