/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மார்கழி பத்தாம் நாள் உற்சவம்
/
மார்கழி பத்தாம் நாள் உற்சவம்
ADDED : டிச 26, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: நித்ய கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி பத்தாம் நாள் உற்சவம் நடந்தது.
சின்னசேலம் பெருந்தேவித் தயார் சமேத நித்ய கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத உற்சவம் நடந்து வருகிறது.
மார்கழி மாத, 10ம் நாள் பூஜையையொட்டி, நேற்று அதிகாலை 4:30 மணி முதல் மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமுறை நடத்தி, பெருந்தேவி தயார் சமேத நித்யகல்யாண வரதராஜ பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தபின், மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது.

