sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

/

போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு


ADDED : அக் 27, 2024 05:06 AM

Google News

ADDED : அக் 27, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில், போலீசாரை கண்டித்து தம்பதி அதிகாலையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சின்னராசு,31; கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர், தனது பல்சர் பைக்கை, 4 மாதங்களுக்கு முன் கார்னேஷன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் புவிராஜா, 27; என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.20 ஆயிரம் பணம் வாங்கினார்.

ஒரு மாதத்திற்கு பிறகும் பைக்கை மீட்காததால் புவிராஜா நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் சின்னராசுவிடம் ஏன் பைக்கை மீட்கவில்லை என கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சின்னராசுவின் மனைவி கமலி, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் சின்னராசு, அவரது மனைவி கமலி மற்றும் குழந்தை, தாய், உறவினர்கள் இருவருடன் உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு 5:45 மணியளவில் தாலுகா அலுவலகம் முன் சென்னை - உளுந்துார்பேட்டை சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், சப் இன்ஸ்பெக்டர் குமரேசன், நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று 6:00 மணிக்கு தர்ணாவை முடித்துக் கொண்டனர்.






      Dinamalar
      Follow us