ADDED : மார் 12, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே காணாமல் போன சென்ட்ரிங் கூலித் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் அடுத்த வாழையாத்துப்பட்டியைச் சேர்ந்த முத்துபாண்டி, 48; இவர், சின்னசேலம் அடுத்த பைத்தந்துார் புதுார் கிராமத்தில் தங்கி சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்.
கடந்த 8 ம் தேதி காலை 9:00 மணிக்கு அவர் வேலை செய்யும் உரிமையாளரிடம் சவுக்கு மரம் வாங்கப் போவதாக கூறி 10 ஆயிரம் ரூபாய் வாங்கிச் கொண்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

