/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
/
விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
ADDED : மார் 05, 2024 07:29 AM
கள்ளக்குறிச்சி: சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் ஞானவேல், 48; வெல்டர். கடந்த 10 நாட்களாக கள்ளக்குறிச்சி மாவட்டம், குரால் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் தங்கி விவசாய கூலி வேலை செய்தார்.
கடந்த 3ம் தேதி காலை 10:00 மணியளவில், வி.கூட்ரோட்டில் இருந்து இறைச்சி வாங்கி கொண்டு ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் வீட்டிற்குச் சென்றார்.
காளசமுத்திரம் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் அன்று மாலை இறந்தார்.
கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

