நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே மகனைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தருமர் மகன் மணிகண்டன், 30; சென்னையில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மணிகண்டன் கடந்த மாதம் 25ம் தேதி வீட்டில் இருந்து பைக்கில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பாப்பாத்தி அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

