/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகைகள் திருட்டு
/
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகைகள் திருட்டு
ADDED : நவ 22, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: லாலாபேட்டையில் தள்ளுவண்டி கடையின் பூட்டை உடைத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த கொணக்கலவாடியைச் சேர்ந்தவர் சாமிகண்ணு, 63; இவர் லாலாபேட்டை பஸ்நிறுத்தம் அருகே தள்ளுவண்டியில் வளையல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் சாமிகண்ணுக்கு கடைக்கு சென்றபோது, பூட்டை உடைக்கப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வளையல், கவரிங் செயின், தோடு, பவுடர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.