sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு

/

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு


ADDED : அக் 05, 2025 03:42 AM

Google News

ADDED : அக் 05, 2025 03:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர பொன்முடி எம்.எல்.ஏ., துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

திருக்கோவிலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ. 54 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் பொன்முடி எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டனர்.

அப்பொழுது பணி விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அப்போது, மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை மொபைல்போனில் தொடர்பு கொண்ட பொன்முடி எம்.எல்.ஏ., மருத்துவமனையை விரைவாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இப்பகுதி மக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் மருத்துவமனையாக இருக்கும் என்பதால், விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டவர நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்முடி தெரிவித்தார்.

ஆய்வின் போது சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், நகராட்சி சேர்மன் முருகன், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us