sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதி பெற்ற மனை பிரிவுகளுக்கும் கமிஷன்; பன்மடங்கு விலை உயர்வுக்கு இதுவும் காரணம்

/

அனுமதி பெற்ற மனை பிரிவுகளுக்கும் கமிஷன்; பன்மடங்கு விலை உயர்வுக்கு இதுவும் காரணம்

அனுமதி பெற்ற மனை பிரிவுகளுக்கும் கமிஷன்; பன்மடங்கு விலை உயர்வுக்கு இதுவும் காரணம்

அனுமதி பெற்ற மனை பிரிவுகளுக்கும் கமிஷன்; பன்மடங்கு விலை உயர்வுக்கு இதுவும் காரணம்


ADDED : ஜூலை 22, 2025 07:50 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 07:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழில். கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்வோரின் போட்டியால் சாலையோர விவசாய நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது. பல இடங்களில் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி, டி.டி.சி.பி., அனுமதி பெறாமல், 10 சென்ட் அளவில் மனையை பிரித்து விற்பனை செய்து விடுகின்றனர்.

அரசு விதிமுறைப்படி 10 சென்ட் அளவைவிட குறைவாக இருந்தால் அதற்கு அரசு அனுமதி பெற வேண்டும். இதனால் மனை பிரிவுகளை 10 சென்ட்டுக்கு மேல் அமைத்து, இடைத்தரகர்கள் மூலம் பத்திரபதிவு செய்து விற்பனை செய்கின்றனர். டி.டி.சி.பி., அனுமதி பெறாத இடங்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்க முடியாது என்பதால், இம்மனைப்பிரிவுகளை விற்பனை செய்ய ஊராட்சி தலைவர்கள் சிலர் அனுமதிப்பதில்லை.

சில தலைவர்களை கவனித்து நிலத்தை விற்பனை செய்து விடுகின்றனர். அனுமதி பெறாத மனை பிரிவுகளுக்கு கமிஷன் பார்த்த சில தலைவர்கள், முறையான டி.டி.சி.பி., அனுமதி பெற்ற்ற மனை பிரிவுகளுக்கும் பணம் கேட்டு தொந்தரவு கொடுக்க துவங்கி விட்டனர்.

நிலத்தை மனை பிரிவாக மாற்ற டி.டி.சி.பி., அனுமதி, பத்திர பதிவு செய்ய பெருந்தொகை செலவிடப்படுவதாகவும், இந்த நிலையில், சில உள்ளாட்சி பிரதிநிதிகள் அனுமதி பெற்ற மனை பிரிவுக்கும் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதனால் மனைகளை நியாயமான விலைக்கு விற்பதை விட, பன் மடங்கு விலை உயர்த்தி விற்கும் நிலை உருவாகிறது.






      Dinamalar
      Follow us