ADDED : ஜன 17, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்தூர்பேட்டை: திருநாவலூர் அருகே கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த மட்டிகை கிராம குளக்கரை அருகே கஞ்சா விற்ப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கஞ்சா விற்ற மூன்று பேரை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து உளுந்தூர்பேட்டை அடுத்த வானம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் 19, கோபிநாத் 32, ஆகாஷ் 23 ஆகிய மூன்று பேரை கைது செய்து 75 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.