sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நேரம் நல்ல நேரம்... பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிர முயற்சி

/

நேரம் நல்ல நேரம்... பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிர முயற்சி

நேரம் நல்ல நேரம்... பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிர முயற்சி

நேரம் நல்ல நேரம்... பா.ம.க., நிர்வாகிகளை இழுக்க தி.மு.க., - அ.தி.மு.க., தீவிர முயற்சி


ADDED : ஜூலை 15, 2025 07:27 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க.,வில் நிலவி வரும் உட்கட்சி குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி அக்கட்சி முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

பா.ம.க.,வில் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இருவரும் பரஸ்பரம் கட்சி நிர்வாகிகளை நீக்குவதும் நியமிப்பதும் என அன்றாடம் அரங்கேறி வருகிறது.

இருவரும் தங்களின் ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாக நியமனம் செய்வதும் எதிராக செயல்படுபவர்களை முக்கிய பொறுப்பாளராக இருந்தாலும் அதிலிருந்து நீக்கியும் வருகின்றனர்.

இது கட்சியில் பல ஆண்டுகளாக பொறுப்பாளர்களாக இருப்பவர்களுக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிலருக்கும் தாங்கள் பொறுப்பில் இருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

பா.ம.க., வில் நிலவிவரும் இந்த உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்தி அதில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., இடையே கடும் போட்டா போட்டி நிலவி வருகிறது.

இதில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் சேர 'ப விட்டமின்' துாண்டில் வீசி முக்கிய நிர்வாகிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வர முயன்று வருகின்றனர்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணிசமான ஓட்டு வங்கி உள்ள பா.ம.க.,வின் முக்கிய நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வந்து விட்டால் கூடுதல் பலம் கிடைக்கும் என்ற நோக்கில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் செயல்பட்டு வருவது பா.ம.க.,வின் தொண்டர்களை கலக்கமடையச் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us