sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி

/

வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி

வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி

வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி


ADDED : அக் 09, 2024 11:18 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார மாணவர்களின் கல்விக் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் திருக்கோவிலூர் கலை அறிவியல் கல்லூரி செயல்பாடுகள் குறித்து அதன் தலைவர் செல்வராஜ் கூறியதாவது.

திருக்கோவிலூர் கல்வி அறக்கட்டளை கிராமப்புற மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி.மைக்ரோபயாலஜி, பி.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டு இன்று பி.எஸ்.சி. கணிதம், பி.காம்.சி.ஏ., பி.ஏ.தமிழ், ஆங்கிலம் பி.எஸ்.சி.இயற்பியல், வேதியல் படங்களுடன் விரிவுபடுத்தப்பட்டு, எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., முதுகலை பட்டப்படிப்புகளுடன் எம்.பிஎல் ., உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி சிறந்த கல்லூரியாக உருவெடுத்துள்ளது.

மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், கணிதம பாடப்பிரிவுகளில் எம்.பில் பட்டப்படிப்பும் துவங்கப்பட்டுள்ளது. நவீன ஆய்வுக்கூடங்கள், நூலகங்கள், அனைத்து வசதிகளுடன் கூடிய கம்ப்யூட்டர், இயற்கை எழில் நிறைந்த காற்றோட்டமான வகுப்பறைகள், மாணவர்களின் நலனில் தனி கவனம் செலுத்தி 100 சதவீத தேர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெற்று சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு கல்லுாரியில் மாணவர்களின் உயர் படிப்புக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஒருங்கிணைத்து வழங்கி வருகிறது. மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் இரத்ததான முகாம், கிராமப்புற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

குறைந்த செலவில் நிறைவான கல்வி ஏழை எளிய மாணவர்களுக்கு கொடுக்கும் மையமாக எங்கள் கல்லூரி செயல்பட்டு கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் சிறந்த கல்லூரி என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்களின் உழைப்பும், சேவை மனப்பான்மையுமே காரணம். இவ்வாறு அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் கூறினார்.






      Dinamalar
      Follow us