/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
/
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
ADDED : செப் 23, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு மணி ஆற்றில் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சோதனை மேற்கொண்டார். அப்போது ஆற்றில் மணல் அள்ளிய நபர்கள் போலீசாரைப் பார்த்து தப்பியோடினார்.
போலீசார், மணல் கடத்தலுக்கு பயன் படுத்திய டிராக்டர் டிப்பரை அரை யூனிட் மணலுடன் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர்.
மேலும், வழக்குப் பதிந்து, தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.