sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்

/

லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்

லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்

லாரி - கார் மோதி விபத்து ஒருவர் பலி; 9 பேர் காயம்


ADDED : செப் 23, 2024 02:28 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 23; ஒரு வாரத்திற்கு முன் புதிதாக ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று உறவினர்களுடன் பண்ருட்டியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டார்.

காரை தமிழ்ச்செல்வன் ஓட்டினார். மதியம், 2:10 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த அ.குரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, உளுந்துார்பேட்டையில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி கார் மீது மோதியது.

இதில், தமிழ்ச்செல்வன் மற்றும் காரில் பயணித்த ஆறு பேர், ஈச்சர் லாரியை ஓட்டி வந்த உளுந்துார்பேட்டை அடுத்த மேப்புலியூர் பொன்னன், 45, மற்றும் லாரியில் அவருடன் பயணித்த நான்கு பேர் என, 10 பேர் படுகாயமடைந்தனர்.

உளுந்துார்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களை மீட்டனர். தமிழ்ச்செல்வன் இறந்தார். மற்றவர்கள் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us