sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இருதரப்பு மோதல்; 2 பேர் கைது

/

இருதரப்பு மோதல்; 2 பேர் கைது

இருதரப்பு மோதல்; 2 பேர் கைது

இருதரப்பு மோதல்; 2 பேர் கைது


ADDED : ஜூலை 10, 2025 09:50 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விஜய், 23; அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் வீட்டிற்கு சென்ற விஜய், நண்பருக்கு பிறந்த நாள் விழா நடப்பதால் அதற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விஜய் அவரது நண்பர்களான ரஞ்சித், 20; ஆதிசங்கர், 23; விஷ்ணு, 22; மோகன், 20; முருகன், 21; ஆகியோர் வெங்கடேசனிடம் தகராறு செய்தனர்.

இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் ரமேஷ், 28; மற்றும் சிலரையும் தாக்கி, மிரட்டல் விடுத்தனர். இதனால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் விஜய், ரஞ்சித் ஆதிசங்கர் உட்பட 6 பேர் மீது அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, ரஞ்சித், ஆதிசங்கர் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us