/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா
/
உலகளந்த பெருமாள் கோவிலில் வாமன ஜெயந்தி விழா
ADDED : செப் 05, 2025 09:50 PM

திருக்கோவிலுார்:
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க பகவான் சிறிய உருவில் வாமனராக அவதரித்தார். திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் வாமனார் அவதாரத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சிறப்பு வாய்ந்த திருவோணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வாமனருக்கு மகா திருமஞ்சனம், மாலை 5:00 மணிக்கு வெண்ணை காப்பு அலங்காரத்தில் லச்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து லட்சதீபம் ஏற்றப்பட்டது.
நேற்று மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலிக்கிறார். ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.