sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்

/

கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கோவில் திருவிழா நடத்த கோரி கிராம மக்கள் சாலை மறியல்


ADDED : ஆக 08, 2025 11:47 PM

Google News

ADDED : ஆக 08, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளி கிழமையில் சாகை வார்த்தல் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று சாகை வார்த்தல் திருவிழா ஏற்பாடு நடந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தங்கள் குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என கூறி பிரச்சனையில் ஈடுபட்டு திருவிழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் திருவிழா தடையின்றி சுமூகமாக நடத்த கோரி, நேற்று காலை 7.45 மணிக்கு திருவெண்ணெய்நல்லுார் - உளுந்துார்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் .

அப்போது, தாசில்தார் தலைமையிலான சமரச கூட்டத்தில் தீர்வு காணுமாறு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து 8:45 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us