/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
/
கோமுகி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
ADDED : நவ 08, 2025 02:14 AM

கச்சிராயபாளையம்: கோமுகி அணையிலிருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன்மலையின் அடிவார பகுதியில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு தோறும் சம்பா சாகுபடிக்கு அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்தாண்டு அணை நிரம்ப கால தாமதம் ஏற்பட்டது.
பருவ மழை துவங்கிய நிலையில் அணையின் முழு கொள்ளளவான 46 அடியில், (560 மில்லியன் கன அடியில்) தற்போது 44 அடி (489. 56 மில்லியன் கன அடி) ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக அணையின் புதிய பாசன கால்வாயில் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 50 கன அடி வீதமும், பழைய பாசன வாய்க்காலில் வினாடிக்கு 60 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது.
அடுத்த 14 நாட்களுக்கு பழைய பாசனத்தில் வினாடிக்கு 120 கன அடியும் புதிய பாசன கால்வாயில் வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் சுபதர்ஷினி, கண்காணிப்பு பொறியாளர் மரியாசூசை, பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர் விஜயகுமரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மேன்கள் அலமேலுஆறுமுகம், சந்திரன், உதவி பொறியாளர்கள் பார்த்திபன், பிரபு, பிரசாந்த் உட்பட பாசன சங்கத் தலைவர்கள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

