/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நீர் வரத்து வாய்க்கால்கள் துார் வார நடவடிக்கை தேவை! பருவ மழைக்குமுன் துவங்க விவசாயிகள் கோரிக்கை
/
நீர் வரத்து வாய்க்கால்கள் துார் வார நடவடிக்கை தேவை! பருவ மழைக்குமுன் துவங்க விவசாயிகள் கோரிக்கை
நீர் வரத்து வாய்க்கால்கள் துார் வார நடவடிக்கை தேவை! பருவ மழைக்குமுன் துவங்க விவசாயிகள் கோரிக்கை
நீர் வரத்து வாய்க்கால்கள் துார் வார நடவடிக்கை தேவை! பருவ மழைக்குமுன் துவங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 23, 2024 11:54 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால்களை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன் துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் நெல், கரும்பு, மக்காசோளம், மஞ்சள், மரவள்ளி, பருத்தி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுபாட்டில் கோமுகி, மணிமுக்தா அணைகள், 335 ஏரிகள் மற்றும் கோமுகி, மணிமுக்தா, கெடிலம் ஆகிய மூன்று ஆறுகள் உள்ளன. 72 அணைகட்டுகள் உள்ளன. இதில் கோமுகி, மணிமுக்தா அணைகள் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. அதேபோல் மாவட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட 380 ஏரிகள் உள்ளது. இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி 50 ஆயிரம் எக்டர் பரப்பளவிற்கு மேலான விவசாய நிலங்கள் உள்ளன.
வடக்கிழக்கு பருவ மழை காலங்களில் அணைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு திறந்து விடப்படுகிறது. தொடர் மழையின் போது அணைகள் நிரம்பியவுடன் பாதுகாப்பு கருதி ெஷட்டர்கள் திறந்து ஆறுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும்.
அத்தருணத்தில் ஆறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடும்போது, அங்குள்ள கால்வாயிலிருந்து ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுகிறது. இதன் மூலம் பெரும்பாலன ஏரிகள் நிரம்பி வருகிறது.
இந்நிலையில், ஆறுகளின் தடுப்பணைகளிலிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய நீர் வரத்து வாய்க்கால்கள் தற்போது அதிகளவில் விழல், செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டிக் கிடக்கிறது. அதேபோல் பெரும்பாலான இடங்களில் ஆக்கிரமிப்பிலும் சிக்கியுள்ளது. இதனால், பருவ மழையின் போது நீர் வரத்து வாய்க்கால்கள் மூலம் ஏரிகளுக்கு விரைவாக தண்ணீர் சென்று நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சிக்குட்பட்ட ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால், உபரி நீர் செல்லக்கூடிய வாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களை சீரமைப்பதில் அதிகாரிகள் மெத்தன போக்கை கடைபிடிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விரைவில் வடக்கிழக்குப் பருவ மழை துவங்க உள்ள நிலையில் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து ஏரிகளின் நீர் வரத்து வாய்க்கால்களிலும் துார் வாரி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.