sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரூ.14.21 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

ரூ.14.21 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.14.21 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ரூ.14.21 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : நவ 15, 2024 04:46 AM

Google News

ADDED : நவ 15, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் நடந்த விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் வேலு விவசாய பயிர் கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், வீட்டு கடன், கல்வி கடன் என மொத்தம் 2,177 பயனாளிகளுக்கு 14 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 163 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும்,சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவாளர், நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவிகள் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.

விழாவில் மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் சொர்ணலட்சுமி, கள்ளக்குறிச்சி துணைப்பதிவாளர் சுகுந்தலதா நகர சேர்மன்கள் சுப்ராயலு, திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதிரன் உட்பட பலர் பங்கேற்றனர். சரக துணைப்பதிவாளர் குறிஞ்சி மணவாளன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us