ADDED : நவ 24, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம், கல்படை கிராமத்தில் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த கல்படை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமராஜ் மனைவி அமுதா, 33; இவர், கடந்த 4ம் தேதி காலை 8:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ராமராஜ் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.