/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை சேராப்பட்டில் புதிய காவல் நிலையம்... அமைக்கப்படுமா? மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்
/
கல்வராயன்மலை சேராப்பட்டில் புதிய காவல் நிலையம்... அமைக்கப்படுமா? மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்
கல்வராயன்மலை சேராப்பட்டில் புதிய காவல் நிலையம்... அமைக்கப்படுமா? மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்
கல்வராயன்மலை சேராப்பட்டில் புதிய காவல் நிலையம்... அமைக்கப்படுமா? மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்
ADDED : மார் 23, 2025 09:51 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கல்வராயன்மலை 45 ஆயிரத்து 225 எக்டேர் பரப்பளவும், 3,000 அடி உயரமும் கொண்டுள்ளது. கல்வராயன்மலை ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளை உள்ளடக்கி, 50 வருவாய் கிராமம் உட்பட 177 கிராமங்கள் உள்ளது. இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
மாவட்டம் உதயமான பின்பு கல்வராயன்மலை புதிய தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கிராமங்களுக்கு, கரியாலுாரில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய கட்டுபாட்டில் 13 ஊராட்சிகளுக்குட்பட்ட142 கிராமங்கள் உள்ளது.
காவல் நிலையத்தில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் பணியில் உள்ளனர். காவல் நிலையத்திற்கான எல்லையானது, சுற்று வட்டார பரப்பளவில் 70 கி.மீ., துாரத்தில் முடிவடைகிறது.
மலைவாழ் மக்கள், புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு செல்வதற்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பல கிராமங்கள் காவல் நிலையத்தில் இருந்து பல கி.மீ., துாரத்தில் உள்ளதால், புகார் தொடர்பாக சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக சென்று விசாரணை மேற்கொள்ள முடிவதில்லை. இதனால், புகார் அளிக்கும் மலைவாழ் மக்களுக்கும் உடனடியாக தீர்வும் கிடைப்பதில்லை.
குறிப்பாக இரவு நேரங்களில் விசாரணைக்கோ அல்லது ரோந்து பணிக்கோ செல்ல முடியாத நிலை உள்ளது.
காவல் நிலையங்களுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்படுவதால், பெரும்பாலோனர் புகார் கொடுப்பதில்லை. காவல் நிலையத்திற்கு சென்றுவர போதிய போக்குவரத்து வசதியும் கிடையாது.
மலையில் உள்ள பெரியார், மேகம், கவ்வியம், வெள்ளி மலை, சிறுக்கலுார் அருவிகளுக்கு குளிக்கவும், இயற்கை எழில் கொஞ்சும் மலையைக் காண பல்வேறு மாவட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதில், ஆறு மற்றும் அருவிகளில் குளிப்பவர்கள் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில், வழக்குப் பதிந்து உடலை தேடி கண்டுபிடிக்க போலீசார் கடும் சிரமப்படுகின்றனர்.
மேலும், கல்வராயன்மலையில் பல இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகிறது.
மலைகளின் நடுவே சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டறிந்து கட்டுபடுத்துவது போலீசாருக்கு பெரும் சவலாக உள்ளது.
மலை கிராமங்களில் திருவிழா, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நீண்ட துாரம் மற்றும் போலீஸ் பற்றாக்குறையால் உரிய பாதுகாப்பு அளிக்க முடிவதில்லை. கடும் பணிச்சுமையால் போலீசார் அவதியடைகின்றனர்.
எனவே, மலைவாழ் மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க கரியாலுார் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து, வஞ்சிக்குழி, கிளாக்காடு, இன்னாடு உள்ளிட்ட சுற்று வட்டார ஊராட்சிகளின் 60க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி சேராப்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.