sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

/

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

அரசு கல்லுாரியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?


ADDED : ஜூன் 04, 2025 09:13 PM

Google News

ADDED : ஜூன் 04, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த, 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது, சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் அருகே இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளுடன் கல்லுாரி, இயங்கி வருகிறது.

இங்கு சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். ஆனால், மாணவர்கள் விளையாடவும், பயிற்சி மேற்கொள்ளவும், இங்கு முறையான விளையாட்டு மைதானம் இல்லை.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' கல்லுாரியில் போதிய விளையாட்டு மைதானம் இருப்பின், மாணவர்கள் தீவிர பயிற்சிகளுடன் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் மைதானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us